புலம்பெயர்ந்து ஐரோப்பில் வாழும் தமிழ் இளைஞர்களால் ஐரோப்பிய மண்ணில் பகுத்தறிவை வளர்க்கும் நோக்கோடு "ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம்" உருவாக்கப்பட்டுள்ளது
ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் தன்னுடைய முதலாவது கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை இயற்றியுள்ளது
ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் தன்னுடைய முதலாவது கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை இயற்றியுள்ளது
மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் அனைத்து செயற்பாடுகளையும் கழகம் கண்டிக்கிறது
மக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை கழகம் முன்னெடுக்கும்
ஐரோப்பாவில் தனி மனிதர்களாகவும் அமைப்புக்களாகவும் பகுத்தறிவு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கழகம் பாராட்டுகிறது
தமிழர்கள் பல மொழிகளை கற்பதோடு தமது தாய்மொழியையும் கற்க வேண்டும் என்பதை கழகம் வலியுறுத்துகிறது
தாய்மொழியை கற்றுக் கொடுக்கும் பிரான்ஸின் தமிழ்சோலை, ஜேர்மனியின் தமிழாலயம் போன்ற நிறுவனங்களை கழகம் பாராட்டுகிறது
தமிழ்நாட்டின் சேதுசமுத்திரத் திட்டத்திற்கு தடை போடும் மதவாதிகளை கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது
தன்னுடைய முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்கைள நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாட்டிற்கு முழு உரிமையும் உள்ளது என்பதை கழகம் வலியுறுத்துகிறது
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை கழகம் ஏற்றுக்கொள்கிறது
தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் நடத்தும் போராட்டத்தின் நியாயத்தன்மைகளை கழகம் ஏற்றுக்கொள்கிறது
தமிழீழத்தில் மேற்கொள்ளப்படும் பகுத்தறிவு சார்ந்த பணிகளை கழகம் பாராட்டுகிறது
இந்தப் பணிகள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை கழகம் வலியுறுத்துகிறது
ஐரோப்பாவில் தலித்தியம் என்ற பெயரில் இனவாத சிறிலங்கா அரசாலும், பார்ப்பனிய வேளாள மேலாதிக்கவாதிகளாலும் மேற்கொள்ளப்படும் குழப்பகர நடவடிக்கைகளை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது
மக்கள் நலனுக்கு விரோதமான இந்த மேலாதிக்கவாதிகள் தமது நலன்களை நிலைநாட்டுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்த முனைவதை கழகம் வன்மையாக கண்டிக்கிறது
மக்கள் விரோத மேலாதிக்கவாதிகளை இனம் காணும்படி அனைவரையும் கழகம் கேட்டுக் கொள்கிறது
3 Kommentare:
உங்கள் கழகம் சேது சமுத்திரத் திட்டத்தினை ஆதரிக்கிறதா?
அது தொடர்பான கொள்கை விளக்கமொன்றினை உங்கள் கழகம் வெளியிடுமா?
வாழ்த்துகள் தோழர்களே!
வாழ்த்துகள்
Kommentar veröffentlichen